
பாலையில் பூப்பூக்கும், நாஞ்சில் நாட்டுப் படைப்பாளி ... மஸ்கட் மு. பஷீர்- ன் ‘பாலைப் பூக்கள்’ கவிதைத் தொகுப்பு. சமுதாயப் பிரதிபலிப்போடு, சிறிது காதலின் முலாம் பூசி, சமுதாயத்தின் வெளிச்சம் காணாத பகுதிகளையும் இணைத்து, வாழ்வின் பல்வேறு நிலைகளின் வனப்பையும் இழப்பையும் வண்ணம் சேர்த்து உங்களுக்காக வார்த்துத் தந்துள்ளேன். அன்பன், மஸ்கட் மு. பஷீர் muscat.basheer@gmail.com
'Paalai Pookal' Collection of Modern Tamil Poets by Muscat. Basheer Released in Muscat

மஸ்கட்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாட்டுக் கவிஞர் மஸ்கட்.மு. பஷீர் எழுதிய ‘பாலைப் பூக்கள்’ கவிதை நூல் ‘தேனிசைத் தென்றல்’ திரு. தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் கலைமாமணி, ‘தேனிசைத் தென்றல்’ திரு.தேவா அவர்கள் புத்தகத்தை வெளியிட பிரபல திரைப்பட நடிகை கலைமாமணி குமாரி. சச்சு அவர்கள் புத்தகப் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள். நூல் ஆசிரியர் மஸ்கட். மு.பஷீர் அவர்கள் மஸ்கட் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளாராகச் செயல்பட்டு வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment